ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம் | டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி? | ஜல்லிக்கட்டு மூலம் வந்த வேட்டையன் வாய்ப்பு : ரஜினி குறித்து பிரமிக்கும் மலையாள வில்லன் | நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மாரடைப்பால் மறைவு | அதிரடி பாடலுடன் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | சட்டம் என் கையில் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் : நடிகர் சதீஷ் வெளியிட்ட தகவல் | படப்பிடிப்பில் விபத்து : சிறிய காயத்துடன் தப்பினார் ஹம்சவர்தன் | 2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2' | தமிழில் அறிமுகமாகும் ஹிருதயம் பட இசையமைப்பாளர் | தனுஷின் ‛நீக்' ரிலீஸ் எப்போது |
பொதுவாக ரஜினியின் கால்ஷீட்டுக்காகத்தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் காத்திருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் பஹத் பாசிலுக்காக காத்திருந்திருக்கிறார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 45 நாட்கள் அதாவது ஒன்றரை மாதம் காத்திருந்துள்ளார்.
இதுகுறித்து வேட்டையன் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் கூறியிருப்பதாவது: கதையை எழுதும்போதே இந்த கேரக்டருக்கு பஹத் பாசில்தான் என்று முடிவு செய்து விட்டேன். ரஜினி முதல் தயாரிப்பு நிறுவனம் லைகா வரை படப்பிடிப்பு ரெடி. கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக்கொண்ட பஹத் பாசிலால் வரமுடியவில்லை. அப்போது அவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த கேரக்டரை பஹத்தை வைத்துதான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னதும் ரஜினியும் ஏற்றுக் கொண்டார். ஒன்றரை மாதத்திற்கு பிறகு பஹத் வந்தார், படப்பிடிப்பு தொடர்ந்தது.
பஹத் மற்ற நடிகர்களைவிடக் குறைவான படங்களில்தான் நடிக்கிறார். ரொம்ப பிஸியான நடிகர். ஆனால் தினமும் நடிக்கிறவர் இல்லை. அவருக்குப் பிடித்தால் மட்டுமே நடிக்கிறார். அவர் கூட வேலை பார்த்ததில் அது நன்றாகப் புரிந்தது. பட வெளியீட்டுக்கு பிறகு அவரது கேரக்டர் பேசப்படும். இவ்வாறு கூறியிருக்கிறார் ஞானவேல்.