இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பொதுவாக ரஜினியின் கால்ஷீட்டுக்காகத்தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் காத்திருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் பஹத் பாசிலுக்காக காத்திருந்திருக்கிறார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 45 நாட்கள் அதாவது ஒன்றரை மாதம் காத்திருந்துள்ளார்.
இதுகுறித்து வேட்டையன் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் கூறியிருப்பதாவது: கதையை எழுதும்போதே இந்த கேரக்டருக்கு பஹத் பாசில்தான் என்று முடிவு செய்து விட்டேன். ரஜினி முதல் தயாரிப்பு நிறுவனம் லைகா வரை படப்பிடிப்பு ரெடி. கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக்கொண்ட பஹத் பாசிலால் வரமுடியவில்லை. அப்போது அவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த கேரக்டரை பஹத்தை வைத்துதான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னதும் ரஜினியும் ஏற்றுக் கொண்டார். ஒன்றரை மாதத்திற்கு பிறகு பஹத் வந்தார், படப்பிடிப்பு தொடர்ந்தது.
பஹத் மற்ற நடிகர்களைவிடக் குறைவான படங்களில்தான் நடிக்கிறார். ரொம்ப பிஸியான நடிகர். ஆனால் தினமும் நடிக்கிறவர் இல்லை. அவருக்குப் பிடித்தால் மட்டுமே நடிக்கிறார். அவர் கூட வேலை பார்த்ததில் அது நன்றாகப் புரிந்தது. பட வெளியீட்டுக்கு பிறகு அவரது கேரக்டர் பேசப்படும். இவ்வாறு கூறியிருக்கிறார் ஞானவேல்.