ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ஜானி. சிறந்த நடன அமைப்பிற்காக தேசிய விருது பெறப்போகிறவர். இவர் மீது இவரது 21 வயது பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொரடப்பட்டது. ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜானி தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி ரங்கா ரெட்டி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். டில்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுபெற தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஜானிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 6ம் தேதியில் இருந்து 10ந்தேதிவரை ஜானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வருகிற 8ந்தேதி டெல்லியில் ஜானி சிறந்த நடன இயக்குனர் விருது பெற இருக்கிறார் ஜானி. தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பெறுவதற்காகவே அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.