குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ஜானி. சிறந்த நடன அமைப்பிற்காக தேசிய விருது பெறப்போகிறவர். இவர் மீது இவரது 21 வயது பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொரடப்பட்டது. ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜானி தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி ரங்கா ரெட்டி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். டில்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுபெற தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஜானிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 6ம் தேதியில் இருந்து 10ந்தேதிவரை ஜானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வருகிற 8ந்தேதி டெல்லியில் ஜானி சிறந்த நடன இயக்குனர் விருது பெற இருக்கிறார் ஜானி. தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பெறுவதற்காகவே அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.