மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனர் கனல் கண்ணன். தீவிர தெய்வ பக்தி கொண்ட இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பு நடத்திய் இந்து உரிமை பிரசார பயண நிறைவு விழாவில் கலந்து கொண்ட பேசியபோது, 'ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வெ.ரா.,வின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்றார்.
அவரின் இந்த பேச்சு குறித்து த.பெ.தி.க மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில், கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 'கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி' என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சிலையை போலீசார் அகற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கனல் கண்ணன் மனுவை ஏற்றுக் கொண்டு, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.