வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழ் சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனர் கனல் கண்ணன். தீவிர தெய்வ பக்தி கொண்ட இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பு நடத்திய் இந்து உரிமை பிரசார பயண நிறைவு விழாவில் கலந்து கொண்ட பேசியபோது, 'ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வெ.ரா.,வின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்றார்.
அவரின் இந்த பேச்சு குறித்து த.பெ.தி.க மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில், கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 'கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி' என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சிலையை போலீசார் அகற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கனல் கண்ணன் மனுவை ஏற்றுக் கொண்டு, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.




