ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம் | டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி? | ஜல்லிக்கட்டு மூலம் வந்த வேட்டையன் வாய்ப்பு : ரஜினி குறித்து பிரமிக்கும் மலையாள வில்லன் | நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மாரடைப்பால் மறைவு | அதிரடி பாடலுடன் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | சட்டம் என் கையில் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் : நடிகர் சதீஷ் வெளியிட்ட தகவல் | படப்பிடிப்பில் விபத்து : சிறிய காயத்துடன் தப்பினார் ஹம்சவர்தன் | 2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2' | தமிழில் அறிமுகமாகும் ஹிருதயம் பட இசையமைப்பாளர் | தனுஷின் ‛நீக்' ரிலீஸ் எப்போது |
இன்றைக்கு எல்லா மொழி படங்களுமே பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. முதன் முதலாக தமிழில் டப் செய்யப்பட்ட படம் 'தேவதாஸ்'.
பிரபல வங்கமொழி எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய நாவல்தான் 'தேவதாஸ்'. ஒரு பணக்கார பெண்ணுக்கும், ஏழை இளைஞனுக்கும் இடையிலான காதல் முலம் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க முரண்பாட்டை சொன்ன படம். இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நாவலைத்தான் பிரம்மதேஸ் பருவா என்ற இயக்குனர் 1935ம் ஆண்டு திரைப்படமாக இயக்கி வெளியிட்டார். அவரே தேவதாசாக நடித்தார். அவர் மனைவி ஜமுனா பார்வதியாக நடித்தார். 4 பேர் ஒளிப்பதிவு செய்தனர். 3 பேர் இசை அமைத்தனர்.
வங்க மொழியில் தயாராகி பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம், அதே ஆண்டில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தது. அந்த பாடல்களை கே.எல்.சைகல் என்பவர் தமிழில் பாடி கொடுத்தார். தொடர்ந்து 1936ம் ஆண்டு ஹிந்தியிலும், 1937ம் ஆண்டு அசாமி மொழியிலும் டப் செய்யப்பட்டது.
இந்த படம் புனேவில் உள்ள இந்திய திரைப்பட ஆவணக் காப்பத்தில் வைக்கப்ட்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் 60 சதவீத படச்சுருள் எரிந்து நாசமானது. தற்போது 40 சதவீத காட்சிகள் மட்டுமே வங்கதேச திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திரைப்பட வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இதுவே தமிழில் டப் செய்யப்பட்ட முதல் படம்.