'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
இன்றைக்கு எல்லா மொழி படங்களுமே பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. முதன் முதலாக தமிழில் டப் செய்யப்பட்ட படம் 'தேவதாஸ்'.
பிரபல வங்கமொழி எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய நாவல்தான் 'தேவதாஸ்'. ஒரு பணக்கார பெண்ணுக்கும், ஏழை இளைஞனுக்கும் இடையிலான காதல் முலம் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க முரண்பாட்டை சொன்ன படம். இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நாவலைத்தான் பிரம்மதேஸ் பருவா என்ற இயக்குனர் 1935ம் ஆண்டு திரைப்படமாக இயக்கி வெளியிட்டார். அவரே தேவதாசாக நடித்தார். அவர் மனைவி ஜமுனா பார்வதியாக நடித்தார். 4 பேர் ஒளிப்பதிவு செய்தனர். 3 பேர் இசை அமைத்தனர்.
வங்க மொழியில் தயாராகி பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம், அதே ஆண்டில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தது. அந்த பாடல்களை கே.எல்.சைகல் என்பவர் தமிழில் பாடி கொடுத்தார். தொடர்ந்து 1936ம் ஆண்டு ஹிந்தியிலும், 1937ம் ஆண்டு அசாமி மொழியிலும் டப் செய்யப்பட்டது.
இந்த படம் புனேவில் உள்ள இந்திய திரைப்பட ஆவணக் காப்பத்தில் வைக்கப்ட்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் 60 சதவீத படச்சுருள் எரிந்து நாசமானது. தற்போது 40 சதவீத காட்சிகள் மட்டுமே வங்கதேச திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திரைப்பட வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இதுவே தமிழில் டப் செய்யப்பட்ட முதல் படம்.