மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். வித்தியாசமான கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவரது படங்களுக்கென ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் அஜயண்டே இரண்டாம் மோசனம் என்கிற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கியுள்ள இந்த படம் மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாகியிருந்தது.
இதில் மூன்று கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இதில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதன் வெற்றி வெளியான அன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இந்த படம் இணைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஒரு போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.