ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். வித்தியாசமான கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவரது படங்களுக்கென ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் அஜயண்டே இரண்டாம் மோசனம் என்கிற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கியுள்ள இந்த படம் மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாகியிருந்தது.
இதில் மூன்று கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இதில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதன் வெற்றி வெளியான அன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இந்த படம் இணைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஒரு போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.