கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். வித்தியாசமான கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவரது படங்களுக்கென ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் அஜயண்டே இரண்டாம் மோசனம் என்கிற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கியுள்ள இந்த படம் மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாகியிருந்தது.
இதில் மூன்று கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இதில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதன் வெற்றி வெளியான அன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இந்த படம் இணைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஒரு போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.