''ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது; 2 நாளில் வீடு திரும்புவார்'': மருத்துவமனை அறிக்கை | சிறிய படங்கள் வெளியாகும் அக்டோபர் 4 | மீண்டும் மீண்டுமா... வனிதா - ராபர்ட் போட்டோவால் பத்திகிட்ட வலைதளம் | தேவரா - அதிர்ச்சியாகக் குறைந்த திங்கள்கிழமை வசூல் | இளையராஜாவை சந்தித்த 'லப்பர் பந்து' குழுவினர் | தணிக்கை குழுவிடம் பணிந்தார் கங்கனா | பிளாஷ்பேக் : கிரைம் திரில்லர் படத்தையும் இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக் : இயக்குனரான முதல் எழுத்தாளர் | 'வேட்டையன்' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா நடிக்கும் 'மௌனம் பேசியதே' சீரியல் |
இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகி அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டை சேர்ந்தவர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். தற்போது இந்த படத்தின் ப்ரீக்வல் ஆக 'காந்தாரா சாப்ட்டர் 1' என்கிற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் கன்னடத் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இதில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரிஷப் ஷெட்டி தனது மனைவியுடன் மோகன்லாலை சந்தித்தது கூட இந்த படத்தில் நடிப்பதற்கு அவரை அழைப்பதற்காக தான் என்றும் தற்போது சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.