பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகி அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டை சேர்ந்தவர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். தற்போது இந்த படத்தின் ப்ரீக்வல் ஆக 'காந்தாரா சாப்ட்டர் 1' என்கிற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் கன்னடத் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இதில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரிஷப் ஷெட்டி தனது மனைவியுடன் மோகன்லாலை சந்தித்தது கூட இந்த படத்தில் நடிப்பதற்கு அவரை அழைப்பதற்காக தான் என்றும் தற்போது சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




