திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழக இசையமைப்பாளர் ஜனனிக்கு சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளருக்கான 6 விருதுகள் மும்பையில் வழங்கப்பட்டுள்ளன.
CLEF எனப்படும் இசை, வானொலி மற்றும் இசை விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் இந்திய சினிமா பிரிவில் ரயில் திரைப்படத்திற்கான 4 விருதுகள் : பூ பூக்குது ("ரயில்") பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளர், ஏலை செவத்தவனே ("ரயில்") பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகி சிறந்த திரைப்படப் பாடல் - பூ பூக்குது பாடலுக்கான தமிழ் ("ரயில்" படத்தில் இருந்து) மற்றும் எது உன் இடம் ("ரயில்") பாடலுக்கான சிறந்த இசை அமைப்பாளர் மற்றும் புரோகிராமர் என 4 விருதுகளை தமிழ் இசையமைப்பாளர் ஜனனி வென்றுள்ளார்.
மேலும் பிரம்மா குமாரிகளின் “சிவனே சிவனே ஓம்” என்ற பக்தி பாடலுக்காக சிறந்த பக்தி இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பக்தி ஆல்பம் என 2 விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுபற்றி ஜனனி கூறுகையில், ‛‛இந்த விருதுகள் பெறுவதற்குக் காரணமான இறைவனுக்கும், CMA குழுவினருக்கும், நடுவுர்களுக்கும், ரயில் திரைப்படத் தயாரிப்பாளர் வேடியப்பன், இயக்குனர் பாஸ்கர் சக்தி, பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, பாடகர் ஹரிஹரன் அனந்து, பாடலாசிரியர் என்.குமார் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி'' என்றார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ மற்றும் எம்ஃபில் இசைப் பட்டம் பெற்றார். தற்போது இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே பிரபா என்ற படத்திற்கு இசையமைத்தவர் சில மாதங்களுக்கு முன் பாஸ்கர் சக்தி இயக்கிய ரயில் என்ற படத்திற்கு இசையமைத்தார்.