கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமாகி குட்டிப்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் பால சரவணன். தொடர்ந்து திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, உள்குத்து உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் வெளியான பேச்சி என்கிற ஹாரர் படத்தில் அதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்களை விட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பால சரவணனின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது,
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நாயகன் ஹரீஷ் கல்யாணின் நண்பனாக படம் முழுவதும் பயணிக்கும் விதமான கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்திருந்தார். படத்தில் இவர் அடிக்கும் ஒவ்வொரு கமெண்ட்டுகளும் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தின. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பால சரவணனை நேரில் அழைத்து முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள பால சரவணன் கூறும்போது, “லப்பர் பந்து பார்த்துவிட்டு நேரில் அழைத்து, பாலா டேய் உன்னை படத்துல அவ்வளவு ரசிச்சேண்டா. உனக்கு தியேட்டர்ல மக்கள் கை தட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பின்னு கட்டி அணைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய்சேதுபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு முத்தங்களும்” என்று கூறியுள்ளார்.
பாலசரவணன் அறிமுகமான புதிதில் விஜய்சேதுபதியுடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் படத்திலும் இன்னும் வெளிவராத இடம் பொருள் ஏவல் என்கிற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.