விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை | பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு | அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர் | ''என்னை பேயாக பார்க்கணுமா?'': ரசிகரிடம் மறுகேள்வி கேட்ட மாளவிகா மோகனன் | தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! | பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? | பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம் | புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம் | அவமானங்களை தாங்கித்தான் டைட்டில் வென்றேன்: 'பருத்திவீரன்' சுஜாதா |
தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில் 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பின் அதை அவரால் மீண்டும் குறைக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில், 2018ல் ஜி.அசோக் இயக்கத்தில் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி சர்மா உள்ளிட்ட பலர் அனுஷ்கா உடன் நடித்து வெளியான 'பாகமதி' படத்தின் 2வது பாகம் விரைவில் உருவாகிறது. இதனை இயக்குனர் அசோக் உறுதிப்படுத்தியுள்ளார். இதிலும் அனுஷ்காவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முதல் பாகத்தை விட இதில் அனுஷ்கா கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் எனவும், 2025ல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் இயக்குனர் அசோக் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கு படமான 'காட்டி' மற்றும் முதல் மலையாள படமான 'காத்தனார்' ஆகியவற்றில் நடித்து வரும் அனுஷ்கா, அதனை முடித்ததும் 'பாகமதி 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.