20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகர் சிரஞ்சீவி நடித்து கடைசியாக வெளிவந்த ' போலா சங்கர்' திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து சிரஞ்சீவி 157வது படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேண்டஸி கதை களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார்கள்.
இதற்கு முன் சிரஞ்சீவி படங்களில் சிறப்பு வேடங்களில் மட்டுமே நடித்துள்ள அனுஷ்கா முதன்முறையாக சிரஞ்சீவி உடன் முழுநீள படத்தில் நடிக்க போகிறார். முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இப்போது அனுஷ்கா தேர்வாகி உள்ளாராம்.