விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை | பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு | அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர் | ''என்னை பேயாக பார்க்கணுமா?'': ரசிகரிடம் மறுகேள்வி கேட்ட மாளவிகா மோகனன் | தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! | பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? | பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம் | புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம் | அவமானங்களை தாங்கித்தான் டைட்டில் வென்றேன்: 'பருத்திவீரன்' சுஜாதா |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'தேவரா' தெலுங்குப் படம் நேற்று முன்தினம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அது தெலுங்கு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 எடி' படமே முதல் நாளில் 191 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் 'தேவரா' படம் 172 கோடி எப்படி வசூல் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.
இதனிடையே, படத்தின் இரண்டாவது நாளுடன் சேர்த்த வசூல் 243 கோடி என்று அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலான 172 கோடியுடன் ஒப்பிடும் போது இரண்டாவது நாளில் 71 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அவ்வளவு பாதியாக வசூல் குறைந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய வசூலையும் சேர்த்து நாளை 300 கோடி வசூல் என அறிவிப்புகள் வரலாம். அதன்பின் வார நாட்களில் படம் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறது என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.