கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமா புராணம், சமூக கதைகள் என்கிற கட்டத்தையும் 1980களில் அழகியலோடு படங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் அதிரடியாக வெளியாகி பரபரப்பு கிளப்பிய படம் 'ஜம்பு'. ஒளிப்பதிவாளர் கர்ணன் தயாரித்து, இயக்கினார். இதில் ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஏ.அசோகன், தேங்காய் சீனிவாசன், எம்ஆர்ஆர் வாசு , மனோரமா மற்றும் ஜெயமாலா ஆகியோர் நடித்தனர்.
அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுக்குள் விழுகிறது. அவர்கள் உயிர் பிழைக்க போராடுகிறார்கள். அதே காட்டில் வசிப்பவர் ஜெய்சங்கர். வெளி உலகம் அறியாத அவர் டார்ஜான் மாதிரி விலங்குகளோடு வாழ்கிறவர். அவர் எப்படி விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுகிறார். ஜெய்சங்கர் எப்படி காட்டுக்குள் வந்தார் என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு மூன்று ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து இந்த படத்தை இயக்கி இருந்தார் கர்ணன். படத்தில் ஜெய்சங்கர் டார்ஜான் வேடத்திலேயே வருவார், மரத்துக்கு மரம் தாவுவார். கதாநாயகி ஜெயமாலா படு கவர்ச்சியாக ஆடுவார், இன்னும் சில காட்சிகளில் அதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள் படு கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பார்கள். விலங்குகள் இணை சேர்வதை பார்த்துதான் நாயகன், நாயகிக்கு காதலும், காமமும் வரும். இப்படி பல சமாச்சாரங்கள் படத்தில் இருந்தது. இதனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் தமிழ் சினிமாவிற்கு புதிய அனுபவமாக இருந்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வசூல் சாதனை படைத்தது.