நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமா புராணம், சமூக கதைகள் என்கிற கட்டத்தையும் 1980களில் அழகியலோடு படங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் அதிரடியாக வெளியாகி பரபரப்பு கிளப்பிய படம் 'ஜம்பு'. ஒளிப்பதிவாளர் கர்ணன் தயாரித்து, இயக்கினார். இதில் ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஏ.அசோகன், தேங்காய் சீனிவாசன், எம்ஆர்ஆர் வாசு , மனோரமா மற்றும் ஜெயமாலா ஆகியோர் நடித்தனர்.
அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுக்குள் விழுகிறது. அவர்கள் உயிர் பிழைக்க போராடுகிறார்கள். அதே காட்டில் வசிப்பவர் ஜெய்சங்கர். வெளி உலகம் அறியாத அவர் டார்ஜான் மாதிரி விலங்குகளோடு வாழ்கிறவர். அவர் எப்படி விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுகிறார். ஜெய்சங்கர் எப்படி காட்டுக்குள் வந்தார் என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு மூன்று ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து இந்த படத்தை இயக்கி இருந்தார் கர்ணன். படத்தில் ஜெய்சங்கர் டார்ஜான் வேடத்திலேயே வருவார், மரத்துக்கு மரம் தாவுவார். கதாநாயகி ஜெயமாலா படு கவர்ச்சியாக ஆடுவார், இன்னும் சில காட்சிகளில் அதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள் படு கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பார்கள். விலங்குகள் இணை சேர்வதை பார்த்துதான் நாயகன், நாயகிக்கு காதலும், காமமும் வரும். இப்படி பல சமாச்சாரங்கள் படத்தில் இருந்தது. இதனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் தமிழ் சினிமாவிற்கு புதிய அனுபவமாக இருந்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வசூல் சாதனை படைத்தது.