இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் |

கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது.
ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் புஷ்பா 2ம் பாகம் உருவாகி வருகிறதாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், சுகுமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்காலிகமாக இப்படத்தை நிறுத்தி வைத்தனர் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல. சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் இந்த பாடல் வைரலானது. இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனம் ஆட தற்போது அனிமல் படத்தின் மூலமாக பிரபலமான த்ரிப்தி டிம்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவர் சம்பள தொகை அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லையாம். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அன்று திரைக்கு வருவதைத்யொட்டி இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




