எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் |

கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது.
ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் புஷ்பா 2ம் பாகம் உருவாகி வருகிறதாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், சுகுமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்காலிகமாக இப்படத்தை நிறுத்தி வைத்தனர் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல. சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் இந்த பாடல் வைரலானது. இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனம் ஆட தற்போது அனிமல் படத்தின் மூலமாக பிரபலமான த்ரிப்தி டிம்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவர் சம்பள தொகை அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லையாம். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அன்று திரைக்கு வருவதைத்யொட்டி இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.