பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்தவர் சினிமாவுக்காக அர்ஜூனனாக மாறினார் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்: மகன் சரண் கோரிக்கை | யு டியூப் டிரெண்டிங்கில் போட்டி போடும் 'தி கோட், வேட்டையன்' | நடித்த படத்தின் விழாவை புறக்கணித்த ஷெரின், சம்யுக்தா | சரத்குமாருடன் நடிக்கும் சண்முக பாண்டியன் | பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை : சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்' | கோலங்கள் தில்லாவுக்கு இந்த வயதில் கல்யாணமா? | கரகாட்டக்காரன் கனகாவா இது? | மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த பிரபலங்கள் : இப்படியா அசிங்கப்படுத்துவது? |
கோல்டன் ஈகிள் ஸ்டூடியோ சார்பில் கோவை பாலசுப்ரமணியம் தயாரித்துள்ள படம் 'தில் ராஜா'. ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் படத்தின் நாயகிகள் ஷெரின், சம்யுக்தா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விழாவில் பேசிய இயக்குனர் ஏ.வெங்கடேஷ் “இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா.
எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல், இருவரும் வரவில்லை. விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும்” என்றார்.