ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்தார், அந்த படம் வெளிவரவில்லை. தற்போது யானை பாகனாக 'படைத் தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி.செல்லையா தயாரிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது “கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது” என்றார்.