ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்தார், அந்த படம் வெளிவரவில்லை. தற்போது யானை பாகனாக 'படைத் தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி.செல்லையா தயாரிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது “கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது” என்றார்.