ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். ரஜினியுடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மேலும், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடித்திருக்கிறார் .
இந்த நேரத்தில் தற்போது வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் ரஜினி கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அதன் பிறகுதான் அந்த நபர் குற்றவாளி அல்ல. சில முக்கிய புள்ளிகள் அவரை குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை ரஜினிக்கு தெரியவருகிறது. இதனால் கொதித்தெழும் ரஜினி, அந்த நபர் மீது வீண்பழி சுமத்தி தன்னை தவறுதலாக என்கவுண்டர் செய்ய வைத்த புள்ளிகளுக்கு எதிராக களமிறங்கி, அந்த நபரின் குடும்பத்திற்கு நீதி வாங்கி தருவதே இந்த வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு என்பது தெரியவந்துள்ளது.