7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. என்றாலும் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது கூலி படத்திற்கு பிறகு மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனத்துக்கும் சிம்புவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தற்போது அந்த கதையை ரஜினிக்காக திருத்தம் செய்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். கதையை கேட்ட ரஜினியும் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
மேலும், இந்த ஜூட் அந்தோணி ஜோசப் மலையாளத்தில் பிரேமம், போக்கிரி சைமன், டான்ஸ் பார்ட்டி, குயின் எலிசபெத் என பல படங்கள் நடித்திருப்பதோடு, டொவினோ தாமஸ் நடித்து வெளியான ‛2018' என பல படங்களில் ரைட்டராக பணியாற்றி இருப்பதோடு குறும்படங்களும் இயக்கி உள்ளார்.