'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. என்றாலும் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது கூலி படத்திற்கு பிறகு மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனத்துக்கும் சிம்புவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தற்போது அந்த கதையை ரஜினிக்காக திருத்தம் செய்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். கதையை கேட்ட ரஜினியும் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
மேலும், இந்த ஜூட் அந்தோணி ஜோசப் மலையாளத்தில் பிரேமம், போக்கிரி சைமன், டான்ஸ் பார்ட்டி, குயின் எலிசபெத் என பல படங்கள் நடித்திருப்பதோடு, டொவினோ தாமஸ் நடித்து வெளியான ‛2018' என பல படங்களில் ரைட்டராக பணியாற்றி இருப்பதோடு குறும்படங்களும் இயக்கி உள்ளார்.