பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' |

தமிழில் மனோரமா போன்று மலையாளத்தில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் கலக்கியவர் கவியூர் பொன்னம்மா. 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் 'சத்யா' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக சினிமா, சின்னத்திரை இரண்டிலுமிருந்து விலகி கொச்சியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்த வந்தார். 78 வயதான பொன்னம்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.