பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
தமிழில் மனோரமா போன்று மலையாளத்தில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் கலக்கியவர் கவியூர் பொன்னம்மா. 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் 'சத்யா' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக சினிமா, சின்னத்திரை இரண்டிலுமிருந்து விலகி கொச்சியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்த வந்தார். 78 வயதான பொன்னம்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.