லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சாண்டோ சின்னப்பா தேவர் அப்போது பெரிய தயாரிப்பாளர், அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம் பெரிய இயக்குனர். இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்துதான் படம் எடுப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்களை அழைத்து எம்ஜிஆர் படம் எடுக்கச் சொல்வார். மறுபேச்சு இல்லாமல் இவர்கள் எடுப்பார்கள். எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய திருமுகம், நடிகர் சிவாஜி வைத்து இயக்கிய ஒரே படம் என்றால் அது ‛தர்மராஜா' தான்.
1980ல் வெளியான இந்த படத்தில் சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், வில்லனாக கே.பாலாஜியும் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்தனர். கோழையாக இருப்பவன் திடீர் வீரனாகிற கதை தான். சிவாஜி அந்த ஊரில் உள்ள கோவிலை பராமரிப்பவர். பெரிய மனிதர் போர்வையில் அந்த ஊருக்கும் வரும் கே பாலாஜி கோவிலில் உள்ள சாமி சிலையை திருடிவிட்டு சிவாஜியின் தங்கையையும் கெடுத்து விட்டு சென்று விடுவார். அப்பாவியான சிவாஜி, பக்கா ஹீரோவாகி, வெளிநாடெல்லாம் சென்று எப்படி பாலாஜியை பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வெளிநாடு எல்லாம் சென்று படமாக்கினார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் சிவாஜி, திருமுகம் இணைந்து படம் பண்ணவில்லை.