Advertisement

சிறப்புச்செய்திகள்

அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவியின் பிரிவு விவகாரம்; தவிப்பில் தயாரிப்பாளர்கள்

18 செப், 2024 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Jayam-Ravis-division-issue,-producers-in-trouble


தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவருக்கென ஒரு நல்ல பெயரும், ஸ்டடியான சினிமா வாழ்க்கையும் இருந்து வருகிறது. ஆனால், கடந்த பத்து நாட்களாக அவரது மனைவி ஆர்த்தியுடனான அவரது பிரிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றவர்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகு பிரிவது சரியா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தங்களது பிரிவு பற்றி இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டாலும் சமூக வலைத்தளங்களிலும், யு டியூப் தளங்களிலும் தொடர்ந்து அவர்களது பிரிவு பற்றி பேசப்பட்டு வருகிறது. இருவரையும் சேர்த்து வைக்க அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் செப்டம்பர் 10ம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக தனது பிரிவு பற்றிய அறிவிப்பை அறிக்கை மூலம் வெளியிட்டார் ஜெயம் ரவி. 10ம் தேதியன்று ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படங்களான 'பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை,' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சிறப்பு போஸ்டர்களையும் வெளியிட்டார்கள்.

ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது இமேஜை அசைத்துப் பார்த்துவிட்டது. அவர் நடித்து அடுத்தடுத்து மேலே குறிப்பிட்ட மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இங்கு சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்காத ரசிகர்கள்தான் அதிகம். எனவே, ஜெயம் ரவியின் பிரிவு குறித்த சர்ச்சை எங்கே தங்களது படங்களைப் பாதித்துவிடுமோ என அவர் நடித்து அடுத்து வெளியாக உள்ள படங்களின் தயாரிப்பாளர்கள் தவிப்பில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவி கடைசியாக தனி கதாநாயகனாக நடிக்க, அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் வெளிவந்த 'சைரன்' படம் படுதோல்வி அடைந்தது. அப்படியிருக்க அடுத்து வெளியாக உள்ள அவரது படங்களின் வியாபாரமும் எதிர்பார்த்தபடி நடக்குமா என்பதும் சந்தேகம்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணன், தம்பியுடன் மீண்டும் கூட்டணியில் ஜிவி பிரகாஷ்அண்ணன், தம்பியுடன் மீண்டும் ... சென்னையில் அவசர அவசரமாக நடந்த 'தேவரா' நிகழ்ச்சி சென்னையில் அவசர அவசரமாக நடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in