மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
அசுரன், வட சென்னை, விடுதலை, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தமிழ். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். போலீஸ் பயிற்சியில் நடக்கும் கஷ்டங்களை பற்றி இந்தப்படம் பேசியிருந்தது. முதல் படமும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. அதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் போஸ்டரில் கப்பலை குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கையில் இந்தப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டராக படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தின் கதைக்களம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரம் பின்னணியில் நடப்பதாக சொல்கிறார்கள்.