என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அசுரன், வட சென்னை, விடுதலை, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தமிழ். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். போலீஸ் பயிற்சியில் நடக்கும் கஷ்டங்களை பற்றி இந்தப்படம் பேசியிருந்தது. முதல் படமும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. அதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் போஸ்டரில் கப்பலை குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கையில் இந்தப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டராக படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தின் கதைக்களம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரம் பின்னணியில் நடப்பதாக சொல்கிறார்கள்.