‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

தனுஷ் நடிப்பு, இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான ராயன் படம் வெற்றி பெற்றது. தற்போது குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் மீண்டும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் இளஞர்கள் நடிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் என்றும், இதன் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சீனியர் நடிகர்களான ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் இருவரையும் தனுஷ் நேரில் சந்தித்து கதை கூறி நடிக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராஜ் கிரண் உடன் வேங்கை படத்தில் அவரது மகனாக நடித்தார் தனுஷ். மேலும் தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்திலும் ராஜ் கிரண் முதன்மை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.