அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
கடந்த 2018ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் இணைந்து நடித்து வெளியான படம் 96. காதல் தோல்வியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தெலுங்கிலும் சர்வானந்த், சமந்தா நடிப்பில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்தார் பிரேம்குமார். ஆனால் ஜானு படம் அங்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கி இருக்கும் பிரேம்குமார், அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், ‛‛96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி விட்டேன். இந்த கதையை நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியிடம் சொன்ன போது அவர் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். அதனால் அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவே நடிப்பார்கள்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரேம்குமார்.