கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

இன்றைக்கு நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாத 1980ல் வந்த படம் 'அவன் அவள் அது'.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது சிவசங்கரியின் 'ஒரு சிங்கம் முயலாகிறது' என்ற நாவலை தழுவி உருவானது. விசு திரைக்கதை, வசனம் எழுதினார். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். 'இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்...' என்ற புகழ்பெற்று பாடல் இடம் பெற்றிருந்தது இந்த படத்தில் தான்.
சிவகுமாரும், லட்சுமியும் கணவன் மனைவி. இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. சிவகுமாரின் தந்தைக்கு வாரிசை பார்க்க வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அப்போது வெளிநாட்டில் அறிமுகமாகி இருந்த 'வாடகை தாய்' முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி வாடகைக்கு தாய் ஸ்ரீ பிரியா மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
வாடகைத்தாய் யார் என்பது மருத்துவர்கள் தவிர வேறு யாரும் அறிந்திருக்கக் கூடாது என்பது விதி. அதையும் மீறி இவர் தான் வாடகைத்தாய் என்பது தெரிந்து விட்டால் என்ன நடக்கும் என்பது மீதி கதை.




