எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் பின்னால் அவர்களது நண்பராக பத்தோடு பதினொன்றாக நடித்து பின்னர் வில்லனாக, குணச்சித்திர நடிகராக என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாக தற்போது வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தொடர்ந்து வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து வெற்றியை பெற்று வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.
மலையாள திரையுலகை சேர்ந்த துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் நிலையில் தனக்கு மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே போதும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் டொவினோ தாமஸ். தமிழில் மாரி -2 என்கிற ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டாததற்கு அவர் கூறிய காரணம்தான் அடடே என ஆச்சரியப்பட வைக்கிறது
இதுபற்றி அவர் கூறும்போது, “ஹிந்தியில் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் (சித்தார்த் நடித்தது) நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் இங்கே படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் அதில் நடிக்க இயலாமல் போனது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நாம் இன்னொரு மொழிக்கு சென்று அவர்களில் யாரோ ஒருவர் வாய்ப்பை தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் என எதுவும் இல்லை. அப்படியே மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மும்பையில் அல்லது ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு மலையாளி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மறுக்காமல் ஒப்புக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.