'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' |

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் 250 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. மற்ற மொழிகளில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் நடிகர் துல்கர் சல்மான், “19 நாட்களில் 50 கோடி ரூபாய் இந்திய மொத்த வசூல்! தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட பார்வையாளர்களின் இந்த அசாதாரண அன்புக்கு நன்றி. ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்ல திரைப்படங்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறீர்கள், அதுதான் இந்த பயணத்தை மிகவும் சிறப்பாக்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'லோகா' படத்தின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதற்காக தான் நடித்த 'காந்தா' படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார் துல்கர். கடந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால், தள்ளி வைத்துள்ளார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.




