மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மலையாள நடிகரான விநாயகன், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்த ‛ஜெயிலர்' படத்தில் வர்மன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் விநாயகன் திரைக்குப் பின்னாலும் தனது வில்லத்தனத்தை அவ்வப்போது காண்பித்து சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே போலீசாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட விநாயகன், நேற்று கொச்சியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கோவாவிற்கு சென்றவர், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த விநாயகன் அங்கிருந்த சிஐஎஸ்எப் போலீஸ் அதிகாரிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.




