நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

மலையாள நடிகரான விநாயகன், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்த ‛ஜெயிலர்' படத்தில் வர்மன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் விநாயகன் திரைக்குப் பின்னாலும் தனது வில்லத்தனத்தை அவ்வப்போது காண்பித்து சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே போலீசாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட விநாயகன், நேற்று கொச்சியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கோவாவிற்கு சென்றவர், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த விநாயகன் அங்கிருந்த சிஐஎஸ்எப் போலீஸ் அதிகாரிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.