கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார், அவருக்கு வயது 71. கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றியவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்.
1986ல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான “பூக்களைப் பறிக்காதீர்கள்” படம் அவருடைய தயாரிப்பில் வெளிவந்த முதல் படம். தரங்கை வி.சண்முகம் என்பவருடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தார். தொடர்ந்து, பிரபு நடித்த 'என் தங்கச்சி படிச்சவ', சத்யராஜ் நடித்த 'வேலை கிடைச்சிடுச்சி', அருண்பாண்டியன் நடித்த 'கோட்டை வாசல்', விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக விக்ரம் நடித்து வெளிவந்த 'தெய்வத் திருமகள்' படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
“நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல்” உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.




