பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
துணிச்சலான பேச்சுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விரைவில் வெளியாக உள்ள எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஆளும் பிஜேபி கட்சியில் உள்ள அவர் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அரசியல் ரீதியாக ஏற்கனவே மிகப்பெரிய சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் விஷாக் நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான புட்டேஜ் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தனக்கு சில நபர்களிடம் இருந்து போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியுள்ளார் விஷாக் நாயர்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் நான் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் சில நான் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தயவுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் என் மீது வெறுப்பை காட்டுவதற்கு முன்பாக உங்களுக்கு தகவல் கொடுத்தவர்களிடம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி முதலில் விசாரியுங்கள்” என்று தனது சோசியல் மீடியா பதிவு மூலமாக கூறியுள்ளார்.