ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சில பல பஞ்சாயத்துகள், வழக்குகள் ஆகியவற்றால் தட்டுத் தடுமாறி எழும்பி வருகிறது. கட்டிட வேலைகள் ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதை விரைந்து முடிக்க தற்போதைய நிர்வாகக் குழுவினர் முயன்று வருகிறார்கள்.
ஏற்கெனவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், நெப்போலியன், தனுஷ், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலா 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள். அதையடுத்து நின்று போன கட்டிட வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பமானது.
இருந்தாலும் இன்னும் சில கோடிகள் இருந்தால் தான் கட்டிட வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதாம். எனவே, வெளிநாடுகளில் நடிகர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தி தேவையான நிதியைப் பெற ஆலோசித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இது குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அடுத்து நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆலோசித்துள்ளார்கள். விரைவில் கலை விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.