'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சில பல பஞ்சாயத்துகள், வழக்குகள் ஆகியவற்றால் தட்டுத் தடுமாறி எழும்பி வருகிறது. கட்டிட வேலைகள் ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதை விரைந்து முடிக்க தற்போதைய நிர்வாகக் குழுவினர் முயன்று வருகிறார்கள்.
ஏற்கெனவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், நெப்போலியன், தனுஷ், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலா 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள். அதையடுத்து நின்று போன கட்டிட வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பமானது.
இருந்தாலும் இன்னும் சில கோடிகள் இருந்தால் தான் கட்டிட வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதாம். எனவே, வெளிநாடுகளில் நடிகர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தி தேவையான நிதியைப் பெற ஆலோசித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இது குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அடுத்து நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆலோசித்துள்ளார்கள். விரைவில் கலை விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.