'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை வைத்து படம் தயாரிக்கப் போகிறவர்கள் சங்கத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்று அதற்கேற்றபடி நடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசப்பட்டது.
இதனிடையே, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சில முக்கிய சங்கங்கள் அடங்கிய கூட்டுக் கூட்டத்தின் முடிவுப்படி நவம்பர் 1 முதல் நடத்த உத்தேசித்துள்ள திரைப்பட வேலை நிறுத்த அறிவிப்பு பற்றியும் விவாதித்துள்ளார்களாம்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் சிலவற்றிற்குத் தீர்வு கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன்படி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் படம் நடித்துத் தர சம்மதிப்பதாக தனுஷ் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
அவரது தயாரிப்பில் தனுஷ் இயக்கம் நடிப்பில் சரித்திரப் படம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நாகார்ஜூனா உள்ளிட்டவர்களும் அதில் நடித்து வந்த நிலையில் படம் திடீரென நிறுத்தப்பட்டது. இப்போது அப்படத்திற்குப் பதிலாக புதிய கதை ஒன்றில் நடித்துத் தருகிறேன் என தனுஷ் சொன்னதால் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாம். மற்ற சில தயாரிப்பாளர்களிடம் தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் குறித்தும் பேசினார்களாம். அவற்றிற்கு என்ன தீர்வு என்பது விரைவில் தெரிய வருமாம்.
நேற்றைய முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் இரண்டு பக்கமும் மகிழ்ச்சி என்கிறார்கள். எனவே, வேலை நிறுத்தப் பற்றிய அறிவிப்புகளை பேச்சு வார்த்தைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரவும் இரு தரப்பிலும் இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.