பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சின்னத்திரை நடிகையான பானுமதி அண்ணா, இனியா, சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனது கடந்த கால சோக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய பானுமதி, 'எனக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். என் கணவர் அதிகமாக குடித்து மஞ்சள் காமலை நோயால் உயிரிழந்தார். ஆனால், கணவரது வீட்டார் நான் அவரை கொன்றுவிட்டதாக கூறினார்கள். அதன்பின் அவர்கள் உறவே வேண்டாம் என்று பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத்திற்காக சீரியல்களில் துணை நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்தேன். அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு மீண்டும் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன். எனது மகன்களை தற்போது நல்லபடியாக வளர்த்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். அவரது சோகக்கதை ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.