வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், சிறுவர்கள் பொன்வேல், ராகுல், மற்றும் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்த 'வாழை' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பலரும் நேரிலேயே கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ள முடியாத சிலர் சமூக வலைத்தளங்களிலும், வீடியோக்கள் மூலமும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கொட்டுக்காளி' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்துடன் போட்டி போடும் விதத்தில்தான் 'வாழை' படமும் வெளியாகி உள்ளது. இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வாழ்த்து வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். ஆனால், அந்தப் பதிவிற்கான கமெண்ட் பகுதியில் 'வெரிபைடு அக்கவுண்ட்' மட்டுமே பதிலளிக்கும் விதத்தில் கட்டுப்பாடு செய்துள்ளார்.
ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் அதில் கமெண்ட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் அவருடைய சில பதிவுகளுக்கு அனைவரும் கமெண்ட் போடும் விதத்திலும், சில பதிவுகளுக்கு 'வெரிபைடு அக்கவுண்ட்' பதிவிடும் விதத்திலும் மட்டுமே 'செட்டிங்'ஐ மாற்றி மாற்றி வைத்து வருகிறார்.




