அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், சிறுவர்கள் பொன்வேல், ராகுல், மற்றும் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்த 'வாழை' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பலரும் நேரிலேயே கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ள முடியாத சிலர் சமூக வலைத்தளங்களிலும், வீடியோக்கள் மூலமும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கொட்டுக்காளி' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்துடன் போட்டி போடும் விதத்தில்தான் 'வாழை' படமும் வெளியாகி உள்ளது. இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வாழ்த்து வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். ஆனால், அந்தப் பதிவிற்கான கமெண்ட் பகுதியில் 'வெரிபைடு அக்கவுண்ட்' மட்டுமே பதிலளிக்கும் விதத்தில் கட்டுப்பாடு செய்துள்ளார்.
ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் அதில் கமெண்ட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் அவருடைய சில பதிவுகளுக்கு அனைவரும் கமெண்ட் போடும் விதத்திலும், சில பதிவுகளுக்கு 'வெரிபைடு அக்கவுண்ட்' பதிவிடும் விதத்திலும் மட்டுமே 'செட்டிங்'ஐ மாற்றி மாற்றி வைத்து வருகிறார்.