என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கல்கி ஏடி 2898 என்கிற படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், சலார் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பிரபாஸ் தற்போது புதிதாக நடித்து வரும் படங்கள் எதுவும் இந்த வருடத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் தற்போது பழைய படங்களை ரீ ரீலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பிரபாஸின் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2010ல் பிரபாஸ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. அன்றைய தினம் அந்தப் படம் வெளியான நாளோ அல்லது பிரபாஸின் பிறந்தநாளோ எதுவும் இல்லாத நிலையிலும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதேபோல பிரபாஸின் அறிமுக படமான ஈஸ்வர் திரைப்படமும் பிரபாஸின் 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.