அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சுதந்திர தினத்தையொட்டி நேற்று தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியான நிலையில், தங்கலான், டிமான்டி காலனி -2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் 23ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛வாழை' மற்றும் கூழாங்கல் படத்தை இயக்கிய பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‛கொட்டுக்காளி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரப் போகின்றன. இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களுமே இதற்கு முன்பு தரமான படங்களை கொடுத்திருப்பதால் இந்த படங்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.