அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ‛ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரை வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. ரகு தாத்தா படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கணும், இப்படி தான் ஆடை அணியணும் என பல்வேறு திணிப்புகள் உள்ளன. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற்றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம்.
இப்போதைக்கு அரசியல் வரும் ஆசை இல்லை, நடிப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம். எனக்கு ஹிந்தி தெரியும். ஹிந்தியை திணிக்க கூடாது என சொல்லியுள்ளோம். மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்பது தவறானது. எல்லா துறையிலும் பிரச்னை இருக்கிறது. சினிமா என்பதால் அது பெரிதாக தெரிகிறது'' என்றார்.




