என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சார்பட்டா பரம்பரை, அநீதி, கழுவேத்தி மூர்க்கண், நட்சத்திரம் நகர்கிறது என பல படங்களில் நடித்த துஷாரா விஜயன் , ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து மேலும் கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அவர், வீர தீர சூரன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றதும் பெரும் பயம் ஏற்பட்டு, படப்பிடிப்புக்கு முந்தைய நாள் காய்ச்சலே வந்துவிட்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பயம் என இரண்டும் கலந்த மனநிலையில் அவருடன் நடித்தேன். அது ஒரு கனவு மாதிரியே இருந்தது. அதோடு வேட்டையன் படத்தில் பஹத் பாசிலுடனும் இணைந்து நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் ராயன் படத்தை போலவே வேட்டையன் படமும் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் துஷாரா விஜயன்.