பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
பிரபல டிவி நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்றார். கடந்த 2020, டிச., 9ல் சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். சித்ராவின் தற்கொலைக்கு இவர் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து சிறையில் இருந்து வந்த ஹேமந்த், மார்ச் மாதம் ஜாமினில் விடுதலை ஆனார்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹேமந்த்தை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவரை நிரபராதி என அறிவித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.