கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிரபல டிவி நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்றார். கடந்த 2020, டிச., 9ல் சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். சித்ராவின் தற்கொலைக்கு இவர் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து சிறையில் இருந்து வந்த ஹேமந்த், மார்ச் மாதம் ஜாமினில் விடுதலை ஆனார்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹேமந்த்தை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவரை நிரபராதி என அறிவித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.