'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
நீண்டநாள் தயாரிப்பில் இருந்த பிரசாந்த் நடித்த 'அந்தகன்' படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து புரமோசன் செய்து வருகிறார் பிரசாந்த். ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்கு ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்தபடி பேட்டி கொடுத்ததால் அவருக்கு போக்குவரத்து போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதனை தனது தங்கள் டுவிட்டரிலும் வெளியிட்டனர்.
கோவையில் நடந்த 'அந்தகன்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்த் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை, ரீமேட் படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது.
ஹெல்மெட் அணியாததால் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து கேட்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது” என்றார்.