தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
அமராவதி படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் அஜித் குமார். இவர் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தபோஸ்டரில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்ற வாசகமும், அஜித் முகத்தில் ரத்தமும் இடம் பெற்றுள்ளது.
தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளது. விடாமுயற்சிக்கு புதிய போஸ்டர் வெளியிட்டது போன்று குட் பேட் அக்லி படத்திற்கும் அஜித்தின் 32 வருட திரை பயணத்தை குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.