பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
அமராவதி படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் அஜித் குமார். இவர் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தபோஸ்டரில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்ற வாசகமும், அஜித் முகத்தில் ரத்தமும் இடம் பெற்றுள்ளது.
தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளது. விடாமுயற்சிக்கு புதிய போஸ்டர் வெளியிட்டது போன்று குட் பேட் அக்லி படத்திற்கும் அஜித்தின் 32 வருட திரை பயணத்தை குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.