பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் |

அமராவதி படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் அஜித் குமார். இவர் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தபோஸ்டரில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்ற வாசகமும், அஜித் முகத்தில் ரத்தமும் இடம் பெற்றுள்ளது.

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளது. விடாமுயற்சிக்கு புதிய போஸ்டர் வெளியிட்டது போன்று குட் பேட் அக்லி படத்திற்கும் அஜித்தின் 32 வருட திரை பயணத்தை குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.