இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் |

அமராவதி படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் அஜித் குமார். இவர் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தபோஸ்டரில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்ற வாசகமும், அஜித் முகத்தில் ரத்தமும் இடம் பெற்றுள்ளது.

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளது. விடாமுயற்சிக்கு புதிய போஸ்டர் வெளியிட்டது போன்று குட் பேட் அக்லி படத்திற்கும் அஜித்தின் 32 வருட திரை பயணத்தை குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.