டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ரயிலிலேயே படமாக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரயிலிலேயே படமானது 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' என்ற படம்.
இந்த படத்தில் ஜெய்சங்கர், சோ, விஜய நிர்மலா, விஜய லலிதா, எஸ்.என். பார்வதி, எஸ்.ஏ.அசோகன், செஞ்சி கிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி. ராமதாஸ், கே.விஜயன் மற்றும் 'கள்ளபார்ட்' நடராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. இறந்தவருடன் பயணித்த ஒரே ஒரு சக பயணி சோ. இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைப் பிடிக்கும் பணி சி.ஐ.டி ஜெய்சங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சோவின் உதவியுடன் வழக்கைத் தீர்க்கவும், இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். இதுதான் படத்தின் கதை.
புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஒன்றின் இந்த கதை தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் தயாரானது. முதல் படமாக மலையாளத்தில் 1967ல் 'கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் தயாரானது. இதில் பிரேம் நசீர் வழக்கைத் தீர்க்கும் சிஐடி அதிகாரியாக நடித்தார். 1968ல் தமிழில் நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. திரைக்கதை வசனத்தை சோ எழுதியிருந்தார். திருமலை, மகாலிங்கம் இரட்டையர்கள் இயக்கி இருந்தனர்.