ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ரயிலிலேயே படமாக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரயிலிலேயே படமானது 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' என்ற படம்.
இந்த படத்தில் ஜெய்சங்கர், சோ, விஜய நிர்மலா, விஜய லலிதா, எஸ்.என். பார்வதி, எஸ்.ஏ.அசோகன், செஞ்சி கிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி. ராமதாஸ், கே.விஜயன் மற்றும் 'கள்ளபார்ட்' நடராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. இறந்தவருடன் பயணித்த ஒரே ஒரு சக பயணி சோ. இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைப் பிடிக்கும் பணி சி.ஐ.டி ஜெய்சங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சோவின் உதவியுடன் வழக்கைத் தீர்க்கவும், இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். இதுதான் படத்தின் கதை.
புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஒன்றின் இந்த கதை தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் தயாரானது. முதல் படமாக மலையாளத்தில் 1967ல் 'கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் தயாரானது. இதில் பிரேம் நசீர் வழக்கைத் தீர்க்கும் சிஐடி அதிகாரியாக நடித்தார். 1968ல் தமிழில் நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. திரைக்கதை வசனத்தை சோ எழுதியிருந்தார். திருமலை, மகாலிங்கம் இரட்டையர்கள் இயக்கி இருந்தனர்.