மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம் அடங்கிய கூட்டுகுழு கூட்டத்தில் அதிரடியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக நடிகர்கள் விஷால், தனுஷ் ஆகியோருக்கு கட்டுப்பாடு விதிப்பது மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 4ம் தேதி கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் நாசர் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷ் மீது விதித்துள்ள தடை மற்றும் கூட்டுகுழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விவாதித்து அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.




