தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம் அடங்கிய கூட்டுகுழு கூட்டத்தில் அதிரடியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக நடிகர்கள் விஷால், தனுஷ் ஆகியோருக்கு கட்டுப்பாடு விதிப்பது மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 4ம் தேதி கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் நாசர் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷ் மீது விதித்துள்ள தடை மற்றும் கூட்டுகுழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விவாதித்து அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.