பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

மலையாள நடிகை பார்வதி தனக்கு ஏற்ற கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனாலேயே மற்ற நடிகைகளில் இருந்து அவர் விரைவில் வித்தியாசப்பட்டும் தெரிகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் கூட அவரது வித்தியாசமான நடிப்பை பறைசாற்றும் விதமாகவே இருந்தது. இதை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் நடிக்க வராவிட்டால் என்ன செய்திருப்பீர்கள் என்கிற வழக்கமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பலரும் நான் டாக்டராகி இருப்பேன், பிசினஸ் உமன் ஆகி இருப்பேன் என்பது போன்று தான் இதுவரை பதில் சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலும் வித்தியாசமாக நான் நடிக்க வராவிட்டால் நிச்சயமாக டீக்கடை ஆரம்பித்திருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பார்வதி. மேலும் இந்த உலகத்தில் ஒவ்வொரு வேலையும் தனக்கென ஒரு கவுரவத்தை வைத்திருக்கிறது. அதனால் டீக்கடை தொழிலிலும் நிச்சயமாக ஏதாவது சாதித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.