எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
தமிழில் ஏற்கனவே வெளியான பல சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் விக்ரமன் இயக்கி சூப்பர் ஹிட்டான சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னை நினைத்து போன்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்று ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் இயக்கிய சூர்ய வம்சம், வானத்தைப் போல என்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை. குறிப்பாக, வானத்தைப் போல படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் அளவுக்கு இப்போதைக்கு நடிகர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த முயற்சிகளை கைவிட்டு விட்டேன். சூர்யா நடிப்பில் இயக்கிய உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டேன். ஆனால் பாதிக்கு மேல் அந்த ஸ்கிரிப்ட் வரவில்லை என்பதால் அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டேன். அதனால் நான் இயக்கிய எந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கப் போவதில்லை என்கிறார் விக்ரமன்.