''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கன்னட பட இயக்குனர் தருண் சுதிரும், நடிகை சோனலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இந்த நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் தனது ரசிகர் ஒருவரை கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் தற்போது சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு முதல் திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் சுதீர். இதற்கு முக்கிய காரணம், இயக்குனர் சுதீரும், சோனலும் காதலித்தபோது இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்போது, அவர்களின் பெற்றோரை சந்தித்து பேசி சமாதானம் செய்து இவர்கள் திருமணத்திற்கு தர்ஷன் தான் சம்மதம் வாங்கி கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே சிறைக்கு சென்று அவருக்கு முதல் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது அவரிடத்தில் திருமணம் அழைப்பிதழை பெற்றுக் கொண்ட நடிகர் தர்ஷன், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக திருமணத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாராம்.