பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சமூகவலைத்தங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக 'ரீல்ஸ்', 'சார்ட்ஸ்'ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வப்போது வரும் பாடல்களுக்கு குடும்ப பெண்கள், இளம் பெண்கள், சிறுமிகள் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ஜெயிலர் மற்றும் அரண்மணை படங்களில் தமன்னா ஆடிய நடனத்தை அனைவரும் ஆடி வெளியிட்டனர். இந்த ரீல்ஸ் நடனங்கள் என்னை போன்ற நடிகைகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்று தமன்னா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஒருகாலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூகவலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள். ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது'' என்றார்.