அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கருத்துகளை ஆதரித்தும், எதிர்கட்சி கருத்துகளை விமர்சித்தும் வந்த கங்கனா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் பிறந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தல் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்.பி ஆகியுள்ள அவர் விரைவில் அமைச்சராகும் சாத்தியகூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எம்.பி., என்கிற வகையில் தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே என்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். தொகுதி மக்கள் என்னை மண்டியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். மாநில மக்கள் மணாலியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். வருகையின் நோக்கம் மற்றும் விஷயமும் முன்னரே எழுதி அனுப்ப வேண்டும். கூட்டத்தையும், நேரம் வீணாவதை தடுக்கவுமே இந்த ஏற்பாடு என்று கூறியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாத அனைத்து தரப்பு மக்களையும் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும். அது அவர்களது பொறுப்பு. அதைவிடுத்து அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.