இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கருத்துகளை ஆதரித்தும், எதிர்கட்சி கருத்துகளை விமர்சித்தும் வந்த கங்கனா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் பிறந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தல் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்.பி ஆகியுள்ள அவர் விரைவில் அமைச்சராகும் சாத்தியகூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எம்.பி., என்கிற வகையில் தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே என்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். தொகுதி மக்கள் என்னை மண்டியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். மாநில மக்கள் மணாலியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். வருகையின் நோக்கம் மற்றும் விஷயமும் முன்னரே எழுதி அனுப்ப வேண்டும். கூட்டத்தையும், நேரம் வீணாவதை தடுக்கவுமே இந்த ஏற்பாடு என்று கூறியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாத அனைத்து தரப்பு மக்களையும் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும். அது அவர்களது பொறுப்பு. அதைவிடுத்து அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.