அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் கமல், சித்தார்த் ஆகியோர் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கேரளா சென்று இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்களில் மறைந்த மலையாள குணச்சித்திர நடிகர் நெடுமுடி வேணுவும் ஒருவர். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்துள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்வில் நெடுமுடி வேணு பற்றி கமல் பேசும்போது, “மலையாள திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக நெடுமுடி வேணு இருந்தார். இன்று நான் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.. அவர் ரொம்பவே ஈசியாக கதாநாயகனாக நடித்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனாலும் ஒரு சிறந்த குணசித்திர நடிகராக அவர் இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கூட அவருக்கு உடல் நலக்குறைவு பாதிப்பு இருந்தது. அந்த சமயத்தில் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்த படம் வெளியான பிறகு இதை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்று நாங்கள் இருவரும் பேசினோம். இன்று இந்த இடத்தில் நான் நிற்கும்போது அவரும் இங்கே என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் கமல்.