ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம் | டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி? | ஜல்லிக்கட்டு மூலம் வந்த வேட்டையன் வாய்ப்பு : ரஜினி குறித்து பிரமிக்கும் மலையாள வில்லன் | நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மாரடைப்பால் மறைவு | அதிரடி பாடலுடன் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | சட்டம் என் கையில் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் : நடிகர் சதீஷ் வெளியிட்ட தகவல் | படப்பிடிப்பில் விபத்து : சிறிய காயத்துடன் தப்பினார் ஹம்சவர்தன் | 2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2' | தமிழில் அறிமுகமாகும் ஹிருதயம் பட இசையமைப்பாளர் | தனுஷின் ‛நீக்' ரிலீஸ் எப்போது |
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், நயன்தாராவை பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபடுத்தி வருகிறார். ஒரு பிரபல டீ செயின் கம்பெனியின் பங்குதாரராக இருக்கும் நயன்தாரா, பெண்களின் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் மலேசியன் கம்பெனி ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதோடு ஒரு நாப்கின் பிராண்ட் கம்பெனியிலும் இணைந்திருக்கிறார்.
தற்போது தான் இணைந்துள்ள நாப்கின் கம்பெனியின் விளம்பரத்தை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் நூதன முறையில் விளம்பரம் செய்து வருகிறார். அந்த நாப்கினுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: "ஒரு பெண் ஒரு மாதத்தில் பலவிதமான நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்கனவே பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை சந்தித்துவரும் நாம் நேசிக்கப்படுவதற்கும் ஆறுதல் படுத்தப்படுவதற்கும் ஏங்குகிறோம். நான் எனது கம்பெனி சானிடரி நாப்கின் உபயோகித்து வசதி கண்டுள்ளேன்.
அதே போல் நீங்களும் உங்களுக்கு வசதியான சவுகரியத்தை ஏற்படுத்தும் சானிடரி நாப்கின் ஒன்றினை தேர்வு செய்யுங்கள். இதை நான் இந்தத் தயாரிப்புடன் சம்மந்தம் இருப்பதால் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு மிகவும் நன்றாக வேலை செய்ததால் சொல்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்னையில்லாத சவுகரியமான மாதவிடாய் காலம் அமைய வாழ்த்துகிறேன். மாதத்தின் மற்ற நேரத்தைப்போல இந்த நேரமும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
பெண்கள் மீதான இந்த திடீர் விளம்பர அக்கறையை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.