அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
10வது லண்டன் நேஷனல் பிலிம் அகாடமி திரைப்பட விழா நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் திரையிடப்பட்ட கேப்டன் மில்லர் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார், தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார்.
விருது பெற்றது குறித்து தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கேப்டன் மில்லர் திரைப்படம், 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் பில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் 'கேப்டன் மில்லர்' சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது பெற்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.